நிவாரி என்ற இடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சிவ்ராஜ் சிங் சவுஹான் உரையாற்றினார். அப்போது கூட்டத்திலிருந்தவர்கள், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளில் ஒருவரைப் பற்றி சரமாரியாகக் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அந்த அதிகாரியை இப்போதே பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தார். குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.