pregnant
pregnantpt web

உ.பி: மகனுடன் இணைந்து, கர்ப்பிணி மகளுக்கு தீ வைத்த தாய்! கொடூர சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி!

நேற்று இரவு ஒரு தாய் தன் மகனுடன் இணைந்து, கர்ப்பிணியாய் இருந்த தன் மகளுக்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹபூரில் நவாடா குர்த் என்ற கிராமத்தில் நேற்று இரவு ஒரு தாய் தன் மகனுடன் இணைந்து, கர்ப்பிணியாய் இருந்த தன் மகளுக்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருமணமாகாத தன் மகள் கர்ப்பமாக இருந்ததை விரும்பாத தாய், மகனுடன் இணைந்து இப்படி செய்ததாக விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் தரப்பில், “அப்பெண்ணின் கருவிலுள்ள குழந்தைக்கு தந்தை யார் என்று அவர்கள் அப்பெண்ணிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாய் மற்றும் சகோதரர், 21 வயதேயான அந்த கர்ப்பிணியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தீ வைத்துள்ளனர்” என்றுள்ளனர்.

காட்டில் இருந்த சில விவசாயிகள் இச்சம்பவத்தைக் கண்டதும் அப்பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 70% எரிந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மீரட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

pregnant
ம.பி. 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: “சிறுமி அபாயகட்டத்தை தாண்டிவிட்டார்”- மாநில அரசு
கர்ப்பிணி
கர்ப்பிணிPT

தகவலறிந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் தாய் மற்றும் சகோதரரை கைது செய்தனர். மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com