''இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன'' - மத்திய அரசு

''இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன'' - மத்திய அரசு

''இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன'' - மத்திய அரசு
Published on

இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை பகிர்ந்துள்ள அவர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.நேற்று ஒரு நாளில் மட்டும் 81 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 1 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com