\
திடீரென மயங்கி விழுந்த 100க்கும் மேற்பட்ட மக்கள்! - வீடு வீடாக சென்ற சுகாதாரத்துறையினர்

திடீரென மயங்கி விழுந்த 100க்கும் மேற்பட்ட மக்கள்! - வீடு வீடாக சென்ற சுகாதாரத்துறையினர்

திடீரென மயங்கி விழுந்த 100க்கும் மேற்பட்ட மக்கள்! - வீடு வீடாக சென்ற சுகாதாரத்துறையினர்
Published on

ஆந்திர மாநிலம் கோதாவரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் திடீரென மயக்கமடைந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கோதாவரியை அடுத்த ஏலூர் உள்ளிட்ட பத்து கிராமங்களில் நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மயக்கமடைந்தனர். மயக்கத்திற்கான காரணம் கண்டறியப்படாததால் சுகாதாரத்துறையினர் முகாம்கள் அமைத்து வீடு வீடாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். ஒரு சிலருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாத நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com