இந்தியா
இந்திய-சீன உறவுக்கு உந்து சக்தி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
இந்திய-சீன உறவுக்கு உந்து சக்தி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக மாமல்லபுரம் வந்தார். அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று நேபாளம் புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து இந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், ’’நமது இரண்டாவது முறை சாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

