வல்லபாய் படேல் பிறந்தநாளான்று தேச ஒற்றுமைக்கான ஓட்டம்: பிரதமர் மோடி

வல்லபாய் படேல் பிறந்தநாளான்று தேச ஒற்றுமைக்கான ஓட்டம்: பிரதமர் மோடி
வல்லபாய் படேல் பிறந்தநாளான்று தேச ஒற்றுமைக்கான ஓட்டம்: பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை ஒட்டி வரும் 31 ஆம் தேதி தேச ஒற்றுமைக்கான ஓட்டம் நாடு முழுவதும் நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று வானொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், இந்தியா எப்போதும் அமைதிக்கு அடையாளமாக இருந்திருப்பதாக தெரிவித்தார். அத்துடன் இந்திய ராணுவம் உலக அமைதிக்கு பெரும் பணியாற்றியிருப்பதாகவும் கூறினார். தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் பணியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய வீரர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உலக அளவில் அமைதிக்காக அதிக வீரர்கள் அனுப்பிய நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சர்தார் வல்லபாய் படேல் பல்வேறு புரட்சிகர கருத்துகளை தெரிவித்ததுடன், அவற்றை பின்பற்றவும் செய்தார் எனக் கூறினார். ஆகையால் நாட்டை ஒற்றுமைப்படுத்திய வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை ஒட்டி வரும் 31 ஆம் தேதி தேச ஒற்றுமைக்கான ஓட்டம் நாடு முழுவதும் நடைபெறும் எனவும் தெரிவித்தார். தற்போது சிறிய குழந்தைகளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், சிறுவர்கள் வெளியே வந்து அதிகம் விளையாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com