பயங்கரவாதத்தை ஒழிக்க உதவத் தயார்: இலங்கை தாக்குதல் குறித்து மோடி

பயங்கரவாதத்தை ஒழிக்க உதவத் தயார்: இலங்கை தாக்குதல் குறித்து மோடி
பயங்கரவாதத்தை ஒழிக்க உதவத் தயார்: இலங்கை தாக்குதல் குறித்து மோடி

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க தயார் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித் தன. காலை 8.45 மணி முதல் 9.05 மணிக்குள் 6 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. பிற்பகல், 1.45 மணியளவில் தெஹிவளையில் தேசிய உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலிலும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.  தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 310 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதில், இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் உள்பட 27 வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த 500-க்கும் அதிகமானோர், பல்வேறு மருத்து‌மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் 7 பேர் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

தொடர் குண்டுவெடிப்பு காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் ட நிலையில், அவசர நிலையையும் அறிவித்தார் அதிபர் சிறிசேன. அதேபோல், நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க தயார் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் தொலைபேசியில் உரையாடினார் என தெரிவித்துள்ளது. மோடி தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தார் எனக்கூறியுள்ள இலங்கை அரசு, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு தொடர்ந்து பலமாக முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com