தூய்மையான காற்று: மோடி ஆசை

தூய்மையான காற்று: மோடி ஆசை

தூய்மையான காற்று: மோடி ஆசை
Published on

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி என்று கூறியுள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீரபத்ர சிங் முதல்வராக உள்ளார். இந்த மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

சிம்லாவில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்ததைப் போல ஹிமாச்சலிலும் மாற்றம் நிகழவேண்டும் என்றார். மேலும், தற்போது காலம் மாறிக்கொண்டுள்ளது, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வீசும் தூய்மையான காற்று ஹிமாச்சல பிரதேசத்தையும் நோக்கிப் பயணிக்கிறது. டெல்லியிலும் தூய்மையான காற்று (பாஜகவின் வெற்றி) வீசுகிறது’’ என்றார்.

‘’நாட்டில் உள்ள முதல்வர்களிலேயே வழக்கறிஞர்களுடன் அதிக நேரம் செலவிடும் முதல்வர் வீரபத்ர சிங்தான். இந்த மாநில மக்கள் நேர்மையான தலைவரை எதிர்நோக்கி உள்ளனர்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com