இந்நிலையில், மோடியின் தாயார் விரைவில் குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு முடிவில்லாதது மற்றும் விலைமதிப்பற்றது. இந்த கடினமான நேரத்தில் எனது அன்பும் ஆதரவும் உங்களுடன் உள்ளது. உங்கள் தாயார் விரைவில் குணமடைவார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி.