“பிரதமர் மோடி இல்லாவிட்டால் ராமர் கோயில் கட்ட முடியுமா?” - அமித்ஷா பேச்சு

“பிரதமர் மோடி இல்லாவிட்டால் ராமர் கோயில் கட்ட முடியுமா?” - அமித்ஷா பேச்சு
“பிரதமர் மோடி இல்லாவிட்டால் ராமர் கோயில் கட்ட முடியுமா?” - அமித்ஷா பேச்சு

பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றிருக்காவிட்டால் ராமர் கோவில், காஷ்மீர் 370 பிரிவு ரத்து ஆகியவை சாத்தியமாகியிருக்குமா? என்று அமித்ஷா கோவாவில் பேசியுள்ளார்.

பாஜகவின் கார்யகர்தா சம்மேளன நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, ''கோவாவில் 2022ம் ஆண்டு நம்முடைய அரசு தனிப்பெரும்பான்மையுடன் அமைய வேண்டும். பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றிருக்காவிட்டால் ராமர் கோவில், காஷ்மீர் 370 பிரிவு ரத்து ஆகியவை சாத்தியமாகியிருக்குமா? சொல்லுங்கள்.

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் உருவாக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளைப்பொறுத்தவரையில், பாஜகவில் மட்டும்தான் கட்சியின் ஆத்மா தலைவர்களிடம் இல்லாமல் தொண்டர்களுக்குள் உள்ளது.

பிஜேபி மட்டுமே ஆத்மாவாக உள்ளது, ஆனால் அவரது ஆத்மா ஒரு தலைவர் அல்ல தொழிலாளர்கள். கட்சி ஊழியர்கள் இல்லாமல் பாஜகவை கற்பனை செய்து பார்க்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com