ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நெற்பயிர்க் கடனும், பயிர் செய்யமுடியாத விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2017-18ஆம் ஆண்களில் ரூ.10 லட்சம் வரை விவசாயக் கடன்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டபடியே, கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் 70% நெற்பயிர்க்கடனாக வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அனுமதிக்கும் விவசாயக்கடன்களை விவசாயிகள் பெறுவதில் பல வங்கிகள் சிக்கலை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.
Read Also -> இரு பெண்கள் தரிசனம் ? - காவல்துறையின் ரகசிய திட்டம்
இதனால் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் இம்முறை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறை ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வட்டியில்லா நெற்பயிர்க்கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயம் செய்யமுடியாத நிலையில் உள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கடன்கள் வட்டி இல்லாமல் வழங்கப்படவுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரூ.30 ஆயிரம் கோடி வட்டி மானியத்திற்காக ஒதுக்கப்படும். இவ்வாறு வருடத்திற்கு ரூ.2.3 லட்சத்தை விவசாயக் கடனுக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Read Also -> ’பாகுபலி’க்கு அடுத்த மாதம் மஸ்தகாபிஷேக விழா!
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக ஆட்சி செய்த சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அத்துடன் அங்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் வரவுள்ளதால், விவசாயத் திட்டங்களை மத்திய அரசு விரைவு படுத்தியுள்ளது.