பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சீனா செல்கிறார். இந்த மாநாடு சியாமென் பகுதியில் நடைபெறுகிறது.

சீனாவில் வரும் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை தங்கியிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டுத் தலைவர்களை தனியே சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் டோக்லாம் எல்லைப் பிரச்னை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, டோக்லாம் பகுதியில் சாலை அமைப்பதற்காக சீனப் படைகள் மேற்கொண்ட முயற்சியை இந்தியா எதிர்த்ததால் கடந்த ஜூன் முதல் அங்கு பதற்றம் நிலவியது. இருநாடுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அடுத்த மாதம் சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com