“ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர்” - உமர் அப்துல்லா மோடி மோதல்

“ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர்” - உமர் அப்துல்லா மோடி மோதல்

“ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர்” - உமர் அப்துல்லா மோடி மோதல்
Published on

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவும் பிரதமர் மோடியும் காஷ்மீர் பிரச்னை குறித்து காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் காலங்களில் மாநில பிரச்னைகளை முன்வைத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது  வழக்கம். அவ்வாறு இன்று காஷ்மீரின் பண்டிப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, “அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 35ஏ யாராவது அழிக்க நினைத்தால் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் தனி பிரதமர்,  தனி ஜனாதிபதி என்ற முறைக்கு திரும்ப வர நேரிடும்”எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சி தலைவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 1953ஆம் ஆண்டிற்கு முன் இருந்த நிலைக்கு செல்லும் எனக் கூறியிருக்கிறார். அதற்கு காங்கிரஸ் கட்சி உரிய விளக்கம் அளிக்கவேண்டும்”எனக் கூறினார்.

இந்நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “என்னுடைய கட்சி எப்போதுமே மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை நடைமுறை படுத்துவதிலே உறுதியாக இருந்து வருகிறது. மேலும் என்னுடைய பேச்சுக்குப் பதிலளித்து பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு என்னைப் பிரபலமாக்கியுள்ளனர்”எனத் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேருவின் காஷ்மீர் கொள்கை தவறு என்றும் பிரிவு 35ஏ அவசரமாக அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது என்றும் கூறியிருந்தார். மேலும் பிரிவு 35 ஏ குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com