“நான் நாட்டுக்காக போரிட்டபோது மோடியும், அமித்ஷாவும் சிறு பிள்ளைகள்” - முன்னாள் ராணுவ வீரர்

“நான் நாட்டுக்காக போரிட்டபோது மோடியும், அமித்ஷாவும் சிறு பிள்ளைகள்” - முன்னாள் ராணுவ வீரர்
“நான் நாட்டுக்காக போரிட்டபோது மோடியும், அமித்ஷாவும் சிறு பிள்ளைகள்” - முன்னாள் ராணுவ வீரர்

“நான் நாட்டுக்காக போரிட்ட போது மோடியும், அமித் ஷாவும் சிறு பிள்ளைகள்” என்று டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ஜோகிந்தர் சிங் கூறியுள்ளார்.

டெல்லியின் சிங்கு எல்லை பகுதியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு போராடி வரும் விவசாயிகளில் ஒருவர் தான் ஜோகிந்தர் சிங். அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்த அவர் முன்னாள் இந்திய ராணுவம் கூட. 1963 முதல் 1991 வரை சுமார் 28 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் அவர் . பணியாற்றியுள்ளார். இரண்டு போரில் நாட்டுக்காக எதிரிகளோடு போரிட்டுள்ளார். 

“நாட்டின் வளங்களை கடந்த 1990 களிலிருந்து மத்திய அரசு கார்ப்பரேட் இடம் ஒப்படைத்து வருகிறது. இப்போது விவசயிகளையும் அப்படி செய்ய முயற்சிக்கிறது. ஆனால் நான் இந்த போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு தான் வீடு திரும்புவேன்” என்கிறார். 

போராட்டத்தில் தேச  துரோகிகள், நக்சலைட் ஊடுருவல் மற்றும் வெளிநாட்டின் சதியினால் தான் போராட்டமே நடப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அது மாதிரியான நக்சலைட்களின் நடமாட்டம் உள்ள இடத்தில் எனக்கு என்ன வேலை என கேட்கிறார் ஜோகிந்தர் சிங். 

“நான் நாட்டுக்காக போரிட்ட போது மோடியும், அமித் ஷாவும் சிறு பிள்ளைகள். மெய்யான தேச பக்தியோடு போராடும் ஒருவரை  இப்படி பழிப்பது சரி அல்ல. இது மந்திரங்களை ஓதும் பூசாரியை கேலி செய்வதற்கு சமம். எது எப்படி இருந்தாலும் எங்கள் (விவசாயிகள்) போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை போரை எதிர்கொள்வதை போலவே அணுகுவேன்” என  அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் அமிர்தசரஸில் விவசாயம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவரை போலவே டெல்லியில் விவசாயிகளோடு முன்னாள் ராணுவ வீரர்கள் சிலரும் போராடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com