திருமணத்தை மீறிய உறவு - 48 வயது பெண்ணுடன் காதல்; கொலையான 17 வயது மகள்!

திருமணத்தை மீறிய உறவு - 48 வயது பெண்ணுடன் காதல்; கொலையான 17 வயது மகள்!
திருமணத்தை மீறிய உறவு - 48 வயது பெண்ணுடன் காதல்; கொலையான 17 வயது மகள்!

டெல்லியில் 48 வயது நிரம்பிய பெண் மீது கொண்ட காதலுக்கு தடையாக இருந்த அவரது 17 வயது மகளை 18 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் கழுத்தை அறுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் திக்ரி எல்லைப் பகுதியில் வசித்து வந்த 18 வயது இளைஞன் ஹரிஷ், பஹதுர்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தான். அப்போது அதே தொழிற்சாலையில் பணிபுரியும் 48 வயது நிரம்பிய பெண் ஒருவரை ஹரிஷ் காதலிக்க துவங்கியுள்ளான். அந்த பெண்ணும் ஹரிஷை காதலிக்கத் துவங்கியது, அந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தனது அப்பா உயிருடன் இருக்கும்போது இன்னொருவருடன் தனது தாய் பழகுவதை அந்த சிறுமி கடுமையாக எதிர்த்ததாக கூறப்படுகிறது. தங்கள் காதலுக்கு இடையூறாக இருக்கும் 17 வயது சிறுமியை தீர்த்துக் கட்ட முடிவெடுத்த ஹரிஷ் நேற்று மதியம் 1 மணியளவில் லேக் ராம் பூங்காவில் வைத்து அவளது கழுத்தை அறுத்துள்ளார். பூங்காவில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து இளைஞரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து முண்ட்கா காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். கழுத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சிஎன்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹரிஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்த முண்ட்கா போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com