நடுவானில் பயணிக்கு நெஞ்சு வலி -விமானம் தரையிறங்கினாலும் நிகழ்ந்த சோகம்

நடுவானில் பயணிக்கு நெஞ்சு வலி -விமானம் தரையிறங்கினாலும் நிகழ்ந்த சோகம்
நடுவானில் பயணிக்கு நெஞ்சு வலி -விமானம் தரையிறங்கினாலும் நிகழ்ந்த சோகம்

பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு  சென்ற விமானத்தில், பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அந்த விமானம் புவனேஸ்வருக்கு திருப்பி விடப்பட்டது.

பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு  'ஏர் ஏசியா' விமானம் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த, மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹபிபுர் கான் (27) என்பவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து விமானி, பயணியின் சிகிச்சைக்காக விமானத்தை அவசரமாக புவனேஸ்வரில் தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில், விமானம் தரையிறக்கப்பட்டது.

தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், ஹபிபுர் கானை பரிசோதித்துப் பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அரை மணி நேரத்திற்குப் பின் விமானம் மீண்டும் புறப்பட்டது.

இதையும் படிக்க: “என் மனைவி பெண்ணே அல்ல” - கணவன் தொடர்ந்த விநோதமான விவாகரத்து மனு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com