காஷ்மீரில் சென்னை இளைஞர் உயிரிழப்பு: மெக்பூபா முப்தி பதவி விலக வலியுறுத்தல்

காஷ்மீரில் சென்னை இளைஞர் உயிரிழப்பு: மெக்பூபா முப்தி பதவி விலக வலியுறுத்தல்
காஷ்மீரில் சென்னை இளைஞர் உயிரிழப்பு: மெக்பூபா முப்தி பதவி விலக வலியுறுத்தல்

காஷ்மீர் மாநிலத்தை ஆள்வதில் தோல்வி அடைந்துவிட்ட மெக்பூபா முப்தி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சென்னை இளைஞர் திருமணி பர்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த கல்வீச்சில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மாநிலத்தில் நிலவும் மோசமான நிலையை கையாள்வதில் அரசு, முதல்வர் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி - பாரதிய ஜனதா கூட்டணி தோல்வி அடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

காஷ்மீரின் நிலையை பிரதமர் புரிந்து கொள்ள இன்னும் எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நிலைமை மேலும் மோசமடைவதற்குள் காஷ்மீர் முதல்வர் பதவியில் இருந்து மெக்பூபா முப்தி விலக வேண்டும் என்றும் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com