உ.பி: துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் காருக்குள் இறந்து கிடந்த பாஜக கவுன்சிலர்..!

உ.பி: துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் காருக்குள் இறந்து கிடந்த பாஜக கவுன்சிலர்..!
உ.பி: துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் காருக்குள் இறந்து கிடந்த பாஜக கவுன்சிலர்..!

பாஜக கவுன்சிலர் மனீஷ் சவுத்ரி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் பாஜக கவுன்சிலராக இருப்பவர் மனீஷ் சவுத்ரி (38). இவர் நேற்று மீரட்டின் கன்கர்கேடா பகுதியில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் காரில் இருந்து சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டார்.

மனீஷ் சவுத்ரி நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் மனீஷ் சவுத்ரி கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம் என்று அவரது குடும்பத்தினர் போலீசிடம் புகார் அளித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,  “மனீஷ் சவுத்ரி தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்துள்ளோம். சுடப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை மீட்டுள்ளோம். ஆனால் அவரது குடும்பத்தினர் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். அந்த கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்று கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com