அரசியல் வாரிசை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தனது அரசியல் வாரிசாக தம்பியின் மகனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தலைமையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் செய்திதொடர்பாளர் உதய்வீர் சிங், தம்பியின் மகன் ஆகாஷ் ஆனந்தை, மாயாவதி தனது அதிகாரப்பூர்வ அரசியல் வாரிசாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மாயாவதி நேரடியாக அரசியல் நடவடிக்கைகளை கண்காணிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com