’39 மனைவிகள், 94 குழந்தைகள்..’ - உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்

’39 மனைவிகள், 94 குழந்தைகள்..’ - உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்
’39 மனைவிகள், 94 குழந்தைகள்..’ - உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்

மிசோரம் மாநிலத்தை சேர்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும் நபரான ஜி்யோனா சனா காலமானார்.

மிசோரம் மாநிலத்தின் பங்தங் டிலாங்னுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. இவருக்கு வயது 76. இவருக்கு 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக்குழந்தைகள் உள்ளனர். உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடையவர் என்ற பெருமைக்குரிய இவர், நேற்று மதியம் 3 மணியளவில் காலமானார். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த அவர், உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

அவர் மரணம் அடைந்தது மிசோரம் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிசோரம் மாநில முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் சோரம் தங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகில் பெரிய குடும்பத்துக்கு தலைமை தாங்கிய ஜி்யோனா சனாவின் மரணம் மிசோரமுக்கு பேரழிப்பாகும். அவரால் இந்த பகுதி சுற்றுலா மையமாக திகழ்ந்தது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com