Headlines
Headlinesfacebook

Headlines|அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி முதல் பாரதிராஜாவின் மகன் மறைவு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி முதல் பாரதிராஜாவின் மகன் மறைவு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை 2 மணி நேரம் சந்தித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல்.

  • 2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என டெல்லியில் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்கு பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவு.

  • நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார். நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் கார்த்தி, மாரி செல்வராஜ், பேரரசு, தியாகராஜன், சினேகன், ரோபோ சங்கர் உள்ளிட்ட திரைத்துறையினர் நேரில் அஞ்சலி.

  • பல திரைப்படங்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் மனோஜ் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், அண்ணாமலை, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல்.

  • மனோஜ் உயிரிழந்ததை இன்னும் நம்ப முடியவில்லை என நடிகர் நாசர் உருக்கம்.

  • எனது நண்பனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என இரங்கல் வீடியோ வெளியிட்ட இளையராஜா.

  • மகாகவி பாரதியார் எட்டையபுரத்தில் வாழ்ந்த வீட்டின் முன்பகுதி மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிந்த போது கீழே யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு.

  • உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் வீடியோ வெளியிட்ட பிறகும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்? என மாவட்ட ஆட்சியர், தமிழக காவல் துறை இயக்குநர் பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.

  • தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 10 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம். நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தியை, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்து உத்தரவு.

  • சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதோதரர் அசோக்குமாருக்கு சம்மன். வரும் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

  • கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக, ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச்சாய்ப்பு.

  • வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக 10 மடங்கு மரக்கன்றுகள் நடப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார்.

  • வங்கதேசத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி என பரவும் தகவல்கள். வதந்தி என ராணுவம் மறுப்பு.

  • அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 55% பொருட்களுக்கு வரியை குறைக்க இந்தியா முடிவு எனத் தகவல். பரபஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை வரும் 2ஆம் தேதி தொடங்கும் நிலையில் சிக்கல்களுக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிரம்.

  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பரபரப்பான போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப். 97 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்ட நாயகன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com