மணிப்பூர் நிலச்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

மணிப்பூர் நிலச்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு
மணிப்பூர் நிலச்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

மணிப்பூர் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரயில்வே கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில்  கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர். ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும் மாயமான 28 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்கலாம்: இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com