மனைவி, மூன்று பிள்ளைகளை கோடரியால் கொன்ற கொடூரன் : காரணம் தெரியாமல் குழம்பிய போலீஸ்

மனைவி, மூன்று பிள்ளைகளை கோடரியால் கொன்ற கொடூரன் : காரணம் தெரியாமல் குழம்பிய போலீஸ்
மனைவி, மூன்று பிள்ளைகளை கோடரியால் கொன்ற கொடூரன் : காரணம் தெரியாமல் குழம்பிய போலீஸ்

மனைவியை கோடரியால் வெட்டிய கணவர், தனது மூன்று பிள்ளைகளை கோடரியால் வெட்டிக்கொன்ற கொடூரம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் துளசிதாஸ். இவர் தனது மனைவி ஆர்தி, 2 மகன்கள் (7 வயது, 6 வயது) மற்றும் 4 வயது மகளுடன் ஹரியானாவில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு தனது மனைவியை கோடரியால் அவர் வெட்டிக்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் தனது பிள்ளைகளை அவர் கோடரியால் வெட்டிக் கொன்றுள்ளார்.

அடுத்த நாள் காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டில் பார்த்துள்ளனர். அப்போது தாய் மற்றும் 3 பிள்ளைகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, உடனே சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திலிருந்த கோடரியை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தப்பி ஓடிய துளசிதாஸை தேடி வருகின்றனர். மேலும் அவர் ஏன் தனது குடும்பத்தை கொன்றார் ? என்ற தகவல் தெரியாமல் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com