மகளுக்கு பீஸ் கட்ட முடியலையே: கோயிலுக்கு பிரசாதம் தயாரிப்பவர் தற்கொலை!

மகளுக்கு பீஸ் கட்ட முடியலையே: கோயிலுக்கு பிரசாதம் தயாரிப்பவர் தற்கொலை!
மகளுக்கு பீஸ் கட்ட முடியலையே: கோயிலுக்கு பிரசாதம் தயாரிப்பவர் தற்கொலை!

மகளுக்கு பீஸ் கட்ட பணமில்லாததால் கோயிலுக்கு பிரசாதம் செய்து கொடுப்பவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மைசூர் அருகிலுள்ள பிருந்தாவன் லே அவுட்டில் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இதன் அருகில் வசித்து வந்தவர் கங்காதர். கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் வசித்துக்கொண்டு பிரசாதம் சமைத்துக் கொடுக்கும் வேலையை செய்து வந்தார். இவர் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர் மகள் நேகா அருகிலுள்ள ஹெப்பாலில் தாத்தா பாட்டியுடன் தங்கி, ஜேஎஸ்எஸ் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்து வந்தார். அவருக்கு கல்லூரிக் கட்டணம் ரூ.12, 500 கட்ட நேற்று கடைசி நாள். இதுபற்றி கடந்த புதன்கிழமை அப்பாவிடம் தெரிவித்திருந்தார் நேகா. அவர், அக்கம் பக்கத்தினர் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் கேட்டுப் பார்த்தார். 
நேற்று காலை அப்பாவிடம் பணம் வாங்கிவிட்டு கல்லூரியில் கட்ட நினைத்தார் நேகா. அதற்காக அப்பாவைப் பார்க்கப் போனார். வீட்டின் கதவை திறந்தவருக்கு அதிர்ச்சி. தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் அப்பா. கண்ணீர் விட்டு கதறினார் நேகா. அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளுக்கு பீஸ் கட்ட பணம் கிடைக்காததால் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com