டிக்டோக் வீடியோவால் நேர்ந்த விபரீதம் ! ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்
ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஏரியில் நரசிம்மலு (24) என்ற இளைஞர் தனது மைத்துனரான மற்றொரு இளைஞருடன் சேர்ந்து குளிக்க சென்றுள்ளார். அவர்கள் இருவரும் குளிக்கும் போது டிக்டாக் வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர். பின்னர் இருவரும் குளித்துக்கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாத நரசிம்மலு ஆழத்தில் சிக்கினார். அத்துடன் தண்ணீர் மூழ்கியபடி திணறியுள்ளார்.
இதைக்கண்ட அவரது மைத்துனர் உடனே ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்துள்ளார். அதற்கு நரசிம்மலு தண்ணீருக்குள் மூழ்கிப்போனார். பின்னர் மீட்புக்குழுவினர் நீரில் மூழ்கி அவரது உடலை மீட்டனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. நரசிம்மலு இறப்பதற்கு முன்னால் அவர்கள் எடுத்த டிக்டாக் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.