தலைக்கு அருகில் செல்போனுக்கு சார்ஜ்: வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த இளைஞர்!

தலைக்கு அருகில் செல்போனுக்கு சார்ஜ்: வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த இளைஞர்!
தலைக்கு அருகில் செல்போனுக்கு சார்ஜ்: வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த இளைஞர்!

தலைக்கு அருகில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொண்டு தூங்கிய இளைஞர், செல்போன் வெடித்ததில் உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த குனா பிரதான் என்ற இளைஞர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். கோவில் வேலைக்காக பரதிப் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த குனா வேலையை முடித்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். வழக்கமாக இரவில் தூங்குவதற்கு முன்பு செல்போன் பயன்படுத்தும் அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்போன் பயன்படுத்திவிட்டு தலைக்கு அருகில் சார்ஜ் போட்டு தூங்கியுள்ளார். 

அப்போது, மின்சாரத்தால் அதிக சூடான செல்போன், வெடித்து சிதறியது. செல்போனுக்கு அருகிலேயே குனா தலையை வைத்து தூங்கியதால் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்த நாள் காலை 5 மணிக்கு குனாவை கண்ட சக தொழிலாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ஜகாத்சிங்புர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com