தாயை கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்ட மகன்.. 77 பக்க குறிப்பில் உருக்கமான காரணம்!

தாயை கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்ட மகன்.. 77 பக்க குறிப்பில் உருக்கமான காரணம்!
தாயை கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்ட மகன்.. 77 பக்க குறிப்பில் உருக்கமான காரணம்!

டெல்லியில் தாயை கொலைசெய்துவிட்டு தானும் கத்தியால் கழுத்தை அறுத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலுள்ள ரோஹினி பகுதியைச் சேர்ந்தவர் க்சிதிஷ். தகப்பனை இழந்த இவர் தாயார் மிதிலேஷுடன் வசித்துவந்துள்ளார். கடந்த சில நாட்களாக இவர்கள் வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதை கவனித்த அக்கம்பக்கத்தினர் நேற்று இரவு 8 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்குவந்த போலீசார் வீட்டுக்குள் செய்ய முயற்சித்தபோது வீடு உட்பகுதியில் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் பால்கனி வழியாக உள்ளே சென்ற போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞரின் உடலை கண்டறிந்தனர். மேலும், அழுகிய நிலையில் கழிவறையில் கிடந்த தாயின் உடலையும் கண்டறிந்தனர்.

இதுகுறித்து துணை ஆணையர் ப்ரனவ் தயால் கூறுகையில், ‘’இருவரின் உடலையும் நாங்கள் பார்த்தபோது, அந்த பெண்ணின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவரது வீட்டிலிருந்து க்சிதிஷ் கையால் எழுதப்பட்ட 77 பக்க தற்கொலை குறிப்பும் கிடைத்துள்ளது. அதில் அவர் தனது தாயை வியாழக்கிழமை கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் அவரது தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு வேலை கிடைக்காததும் தற்கொலை மற்றொரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை இந்த மரணத்தில் எந்த சதித்திட்டமும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து அவர்களுடைய உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com