பழக மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!

பழக மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!
பழக மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தன்னுடன் பழக மறுத்த இளம்பெண் மீது, ஆசிட் வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபத்தில் உள்ள தத்தத்ரேயா நகரை சேர்ந்தவர் கதிரா பேகம். இவர், சுபாஷ் நகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதீப் என்பவருடன் நட்பு ரீதியில் பழகி வந்தள்ளார். ஆனால், அவர் பேகத்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததால், பேகம் பிரதீப்பின் நட்பை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில், பிரதீப் நேற்றிரவு 8 மணியளவில், பேகத்தை, தத்தத்ரேயா நகரில் உள்ள கோயிலுக்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பேகத்தின் மீது பிரதீப் ஆசிட்டை வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் முகம், கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த பேகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com