துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது


துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் தனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டதிற்காக அவருடைய வீட்டுக்கு 
சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே சில நண்பர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் சவான் என்ற இளைஞர் அந்தப் பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளி சவான் மீது ராஜ் பார்க் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் பொம்மை துப்பாக்கி மூலம் மிரட்டி 21 வயது பெண்ணை  பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாடகை கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். டிரைவரின் நாக்கை கடித்து இளம்பெண் தப்பித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com