பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்தார் மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்தார் மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்தார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென்னை சந்தித்து பேசினார். 

கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த இச்சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாகவும் இதைத் தொடர்ந்து ஜசோதா பென்னுக்கு மம்தா புடவை ஒன்றை பரிசளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கல்யாணேஸ்வரி கோயிலில் வழிபட 2 நாள் பயணமாக வந்திருந்த ஜசோதா பென் கொல்கத்தா வழியாக ஊர் திரும்பினார். 

அப்போது பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்வதற்காக மம்தாவும் கொல்கத்தா விமான நிலையம் வந்திருந்தார். மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நிலுவையிலுள்ள நிதியை பெறுதல் உள்ளிட்டவை குறித்து மோடியுடன் மம்தா இன்று பேசுவார் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com