சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா பானர்ஜி வழக்கு: ஜூன் 24-ல் விசாரணை

சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா பானர்ஜி வழக்கு: ஜூன் 24-ல் விசாரணை
சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா பானர்ஜி வழக்கு: ஜூன் 24-ல் விசாரணை
மேற்கு வங்க தேர்தலில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதற்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு வரும் 24-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. எனினும், நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நந்திகிராம் தொகுதியில் பணப்பட்டுவாடா, லஞ்சம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி, நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போதும் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என மம்தா பானர்ஜி கோரியுள்ளார்.
இந்த மனுவானது, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கவுசிக் சண்டா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘இது தேர்தல் தொடர்பான மனு என்பதால் முதல் நாள் விசாரணையில் மம்தா பானர்ஜி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்’’ என நீதிபதி கூறினார். இதனை மம்தாவின் வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, இந்த வழக்கை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். தவிர, தோல்வியுற்ற மேலும் 4 திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்கும் 24-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com