மேற்கு வங்க வாழ்த்துப்பாடலை உருவாக்குகிறார் மம்தா

மேற்கு வங்க வாழ்த்துப்பாடலை உருவாக்குகிறார் மம்தா
மேற்கு வங்க வாழ்த்துப்பாடலை உருவாக்குகிறார் மம்தா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்திற்காக, தானே வாழ்த்துப்பாடல் மற்றும் சின்னத்தை உருவாக்கி வருகிறார். 

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மேற்கு வங்கத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை முறியடிக்கும் வகையில் அம்மாநில முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில், தமிழ்நாட்டிற்காக உள்ள தமிழ்த்தாய் வாழ்த்துபோன்று, இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான வங்கதேசத்தின் தனித்துவமான கலாசாரம் முற்றிலும் வேறுபட்டது என்பதை வலியுறுத்தும் வகையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்திற்கான பாடல் மற்றும் சின்னம் ஆகியவற்றை உருவாக்குதில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். தானே எழுதி வரும் இந்த வாழ்த்துப்பாடலை பிரபலமான பாடகரை கொண்டு பாட வைக்க மம்தா முடிவெடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com