மக்களவையில் பேச பணம்?: மவுனம் கலைத்த மம்தா பானர்ஜி.. மஹுவா மொய்த்ராவுக்கு திடீர் ஆதரவு!

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.
மஹுவா மொய்த்ரா, மம்தா பானர்ஜி
மஹுவா மொய்த்ரா, மம்தா பானர்ஜிட்விட்டர்

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார்.

இதுதொடர்பாக, மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, கடந்த நவம்பர் 9-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த பரிந்துரை குறித்து மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பரிந்துரை நிறைவேற்றப்பட்டால், மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிக்கப்படும்.

இந்த நிலையில், மக்களவை செயலாளர் புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளார். அதில், ‘நாடாளுமன்ற இணைய கணக்கு விவரம், கடவுச் சொல்லை எம்பிக்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. வாய்மொழியாகப் பதில் கோரப்படும் கேள்விகள், சம்பந்தப்பட்ட எம்பியின் கணக்கில் கேள்விநேர நாளில் காலை 9 மணிக்கு பதிவேற்றம் செய்யப்படும்.

எழுத்துப்பூர்வமாகப் பதில் கோரப்படும் கேள்விகள், சம்பந்தப்பட்ட எம்பியின் கணக்கில் கேள்விநேரம் முடிந்தபிறகு பதிவேற்றம் செய்யப்படும். வாய்மொழி, எழுத்துப்பூர்வமாக பதில் கோரப்படும் கேள்விகள் ரகசியமானவை. இந்தக் கேள்விகளின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டியது எம்.பி.க்களின் கடமை’ என்று புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மஹுவா மொய்த்ரா, மம்தா பானர்ஜி
மஹுவா மொய்த்ராவுக்கு புதிய பொறுப்பு.. ஆதரவுக்கரம் நீட்டிய திரிணாமுல்! மம்தாவின் திட்டம் என்ன?

இது ஒருபுறமிருக்க மறுபுறம், மஹுவா மொய்தா விவகாரத்தில் இதுவரை அமைதிகாத்து வந்த அந்தக் கட்சி, தற்போது அவருக்கு ஆதரவு அளித்துள்ளது. மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. இதன் ஒருபகுதியாக மக்களவையில் இருந்து மஹுவா மொய்த்ராவை வெளியேற்ற சதித் திட்டம் தீட்டப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இது ஏற்கெனவே அவர்கள் திட்டமிட்டு வைத்திருந்த ஒன்றுதான். ஆனால் இந்த பழிவாங்கும் நடவடிக்கை வரும் மக்களவைத் தேர்தலில் மஹுவா மொய்த்ராவுக்கு சாதகமாக அமையும். மக்களவைத் தேர்தல் நெருங்குகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு அடுத்த சில மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்கும்” என மஹுவாக்கு ஆதரவாக மம்தா பேசியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, இந்தப் பிரச்னையால் மஹுவா மொய்த்ரா கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படலாம் எனவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு எம்.பி. சீட்டுக்கு வழங்கப்படாமல் தவிர்க்கப்படலாம் எனவும் செய்திகள் பரவின. இதையடுத்து, கிருஷ்ணா நகர் மாவட்ட பிரிவின் தலைவராக மஹுவா மொய்த்ராவை நியமித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ’அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது’ - எப்போதும் தனிமையில் வாடும் 4 வயது குழந்தையின் கண்ணீர் வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com