பண மதிப்பு நீக்க விவகாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஏஜெண்டாக செயல்படுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்நிறுவனத்தின் 40 சதவிகித பங்குகளை சீனாவை சேர்ந்த நிறுவனம் வைத்துள்ளதாகவும் மம்தா தெரிவித்தார். இதற்கிடையில் பிரதமர் மோடி குறித்து திரிணாமுல் கட்சியினர் தெரிவித்து வரும் கருத்துகள் அதிர்ச்சியளிப்பதாகவும் தரம் தாழ்ந்த அரசியலில் அவர்கள் ஈடுபடுவதாகவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.