மும்பையில் நள்ளிரவில் தீ விபத்து: 14 பேர் பலி

மும்பையில் நள்ளிரவில் தீ விபத்து: 14 பேர் பலி

மும்பையில் நள்ளிரவில் தீ விபத்து: 14 பேர் பலி
Published on

மும்பையில் அடுக்குமாடி கட்டடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கமலா மில்ஸ் என்ற 4 அடுக்குகளைக் கொண்ட கட்டடத்தில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த கட்டடத்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com