மும்பையில் வேகமாக பரவும் கொரோனா: தடுமாறும் மகாராஷ்டிரா..!

மும்பையில் வேகமாக பரவும் கொரோனா: தடுமாறும் மகாராஷ்டிரா..!
மும்பையில் வேகமாக பரவும் கொரோனா: தடுமாறும் மகாராஷ்டிரா..!

மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 3,300 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 3,300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,16,752 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 114 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,651 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது 51,921 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 59,166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடந்துள்ளனர். இதில் 1,315 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மும்பையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,501 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,242ஆக உள்ளது. இதில் தாராவியில் மட்டும் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,106ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,67,264 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,262 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com