\
விவசாய கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - பேரவையில் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

விவசாய கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - பேரவையில் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

விவசாய கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - பேரவையில் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
Published on

மகாராஷ்டிராவில் விவசாயிகள் கடன் ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் விவசாயிகள் கடன் ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும், அதற்கான பணம் வங்கிகளில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் மார்ச் மாதம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com