இணையத்தில் மலர்ந்த காதல்: 34 வயது பெண்ணைத் திருமணம் முடித்த 80 வயது முதியவர்!

80 வயது முதியவர் ஒருவருக்கும் 34 வயது பெண்மணிக்கும் காதல் மலர்ந்திருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது.
ஷீலா இங்கிள், பலுராம் பக்கிரி
ஷீலா இங்கிள், பலுராம் பக்கிரிட்விட்டர்

இன்றைய உலகம் இணையத்தில் அடங்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் அந்த இணையத்தின் வாயிலாக வயது வித்தியாசமின்றி காதல்கள் பிறப்பது சர்வசாதாரணமாகி வருகிறது. அந்த வகையில் 80 வயது முதியவர் ஒருவருக்கும் 34 வயது பெண்மணிக்கும் காதல் மலர்ந்திருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மாவட்டம் மகாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் பலுராம் பக்கிரி. இவருக்கு வயது 80. அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியைச் சேர்ந்தவர் ஷீலா இங்கிள். இவருக்கு வயது 34. இவர்கள் இருவருக்குள்ளும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். பின்பு, இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதில் உறுதியாகவும் இருந்துள்ளனர்.

அதன்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தற்போது, திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன. பலுராம் இணையத்தில் ஆக்டிவ்வாக இருந்ததாலேயே இந்தக் காதல் அமைந்ததாக தெரிவித்துள்ளார். இவர்களுடைய காதல் திருமணமும் எல்லைகளைக் கடந்து சாதித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை - கைவிரித்த ஆப்பிள் நிர்வாகம்!

ஷீலா இங்கிள், பலுராம் பக்கிரி
கானா நாட்டில் 12 வயது சிறுமியை மணந்த 63 வயது ஆன்மிகத் தலைவர்.. கடும் எதிர்ப்பால் நடந்த திருப்பம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com