மக்களவை தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு ! தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

மக்களவை தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு ! தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

மக்களவை தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு ! தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
Published on

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

கடந்த 19-ஆம் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டப்பேரவைத்  தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக காலை 7 மணியளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்தும் தபால் வாக்குகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. கடைசியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com