மக்களவை தேர்தல் 2024 | நாளை எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது?

இந்தியாவில் நாடு முழுவதும் முதற்கட்டமாக நாளை 102 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்குரிமை
வாக்குரிமைமுகநூல்

இந்தியாவில் நாடு முழுவதும் முதற்கட்டமாக நாளை 102 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அவை என்னென்ன? எந்தெந்த மாநிலத்தில் இருந்து எத்தனை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது? பார்ப்போம்...

தமிழ்நாட்டின் 39 தொகுதிகள், புதுச்சேரியின் 1 தொகுதி, அருணாச்சலப்பிரதேசத்தின் 2 தொகுதிகள், அசாமின் 5 தொகுதிகள், பீகாரின் 4 தொகுதிகள், சத்தீஷ்கரின் ஒரு தொகுதி, மத்தியப்பிரதேசத்தின் 6 தொகுதிகள், மகாராஷ்ட்ராவின் 5 தொகுதிகள் ஆகியவற்றுக்கு முதற்கட்டமாக நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குரிமை - தேர்தல் ஆணையம்
வாக்குரிமை - தேர்தல் ஆணையம்ட்விட்டர்

இதேபோல மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் தலா 2 தொகுதிகள, மிசோரம், நாகாலாந்தின் தலா ஒரு தொகுதி, ராஜஸ்தானின் 12 தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குரிமை
Dear Voters!! வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?.. இந்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்!

போலவே சிக்கிம், திரிபுராவின் தலா ஒருதொகுதி, உத்தரப்பிரதேசத்தின் 8 தொகுதிகள், உத்தராகண்ட்டின் 5 தொகுதிகள், மேற்குவங்கத்தின் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குரிமை
காலை தலைப்புச் செய்திகள் | மும்முரமாகும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் முதல் இளையராஜா விளக்கம் வரை!

மேலும் அந்தமான், நிகோபர், ஜம்மு, காஷ்மீர், லட்சத்தீவுகளின் தலா ஒருதொகுதிக்கும் ஏப்ரல் 19 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4 ஆம் தேதி நாடு முழுவதும் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com