மக்களவைத் தேர்தல் : நாளை 5ஆம் கட்ட வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் : நாளை 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் : நாளை 5ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஐந்தாவது கட்ட மக்களவைத் தேர்தல் நாளை 51 தொகுதிகளில் நடைபெறுகிறது.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக 373 தொகுதிகளு‌க்கு தேர்தல்‌ நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 5வது ‌கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. வாக்கு இயந்திரங்கள் அந்த‌ந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளன. 

வாக்கு இயந்திரங்கள் பழுதாகும் பட்சத்தில் மாற்று இயந்திரங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க விரிவான பாது‌காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முதல் 4 கட்டத் தேர்தலிலும் அதிகளவு வன்முறை சம்பவ‌ங்கள் நடைபெற்ற மேற்கு வங்காளத்தில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் நடைபெற உள்ள இறுதிக் கட்டத் தேர்தலுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுக‌ள் செ‌ய்யப்ப‌ட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com