மின்னல் தாக்கி 32 பேர் பலி : உத்தரப் பிரதேசத்தில் துயரம்

மின்னல் தாக்கி 32 பேர் பலி : உத்தரப் பிரதேசத்தில் துயரம்
மின்னல் தாக்கி 32 பேர் பலி : உத்தரப் பிரதேசத்தில் துயரம்

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 32 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 4 நாட்களில் மின்னல் தாக்கி 32 பேர் உயிழந்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி அம்பேத்கர் நகரில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து 19ஆம் தேதி குஷிநகர், டியோரியா ஆகிய இடங்களில் இருவர் உயிர்ழந்தனர். இதைத்தொடர்ந்து 20ஆம் தேதி இவர் பலியாகினர். இந்நிலையில் நேற்று கான்பூர் மற்று ஃபதெபூரில் தலா 7 பேரும், ஜான்சியில் 5 பேரும், ஜலாவுனில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் ஹமிர்பூரில் 3 பேர், காளிப்பூரில் இருவர், ஜவுன்பூர், பிரதாப்கார், கான்பூர் தெஹாட் மற்றும் சித்ராகூட்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு மொத்தம் 32 பேர் இதுவரை மின்னல் தாக்குதலுக்கு இறந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com