“என் நாட்டை விட்டுவிடுங்கள்” - பயங்கரவாதிகளுக்கு இலங்கை அதிபர் கோரிக்கை

“என் நாட்டை விட்டுவிடுங்கள்” - பயங்கரவாதிகளுக்கு இலங்கை அதிபர் கோரிக்கை
“என் நாட்டை விட்டுவிடுங்கள்” - பயங்கரவாதிகளுக்கு இலங்கை அதிபர் கோரிக்கை

என்னுடைய நாட்டை விட்டுவிடுங்கள் என பயங்கரவாதிகளுக்கு இலங்கை அதிபர் சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளிநாட்டு பயங்கரவாதிகள் உதவியுடன் உள்நாட்டு பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்தது. இதில் தமிழில் பேசும் பயங்கரவாதி ஜக்ரான் ஹாசிம்தான் மூளையாக செயல்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டது. இலங்கை போன்ற சிறிய நாடுகளை தன்னுடைய இலக்காக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் எனப் பாதுகாப்பு படைகள் அனைத்தும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அரசுதரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ரமலான் மாதம் மே 6-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இத்தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் என்னுடைய நாட்டை விட்டுவிடுங்கள் எனப் பயங்கரவாதிகளுக்கு சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்கை செய்திக்கு பேட்டியளித்த இலங்கை அதிபர் சிறிசேன,  “ஈஸ்டர் தின தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாதி மூளையாக செயல்பட்டு இருக்கலாம். பயங்கரவாத குழு என்னுடைய தேசத்தை விட்டு விடவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன். இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றுள்ள சிறிய அளவிலான குழு பயங்கரவாத குழுவிடம் பயிற்சி பெற்றுள்ளது. தாக்குதல் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தி வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com