2016 கும்பமேளாவில் காணாமல்போன பெண்ணை 2021 கும்பமேளாவில் கண்டுபிடித்த குடும்பத்தினர்

2016 கும்பமேளாவில் காணாமல்போன பெண்ணை 2021 கும்பமேளாவில் கண்டுபிடித்த குடும்பத்தினர்
2016 கும்பமேளாவில் காணாமல்போன பெண்ணை 2021 கும்பமேளாவில் கண்டுபிடித்த குடும்பத்தினர்

கடந்த 2016 கும்பமேளாவில் காணாமல்போன பெண் ஒருவர், இந்த ஆண்டு நடக்கும் ஹரித்வார் கும்பமேளாவில் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கிடைத்திருக்கிறார்.

கிருஷ்ணா தேவி என்ற பெண் 2016-ல் ஆர்த் கும்பமேளாவில் காணாமல் போனார். அவரை ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு நடக்கும் கும்பமேளாவில் அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

65 வயதான அந்த பெண்ணை காணாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களின் குடும்பம் தேடிக்கொண்டிருந்தது, ஆனாலும் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. " காணாமல் போன பிறகு நாங்கள் அவரின் புகைப்படங்களை செய்தித்தாள்களில் வெளியிட்டோம், டிவியில் விளம்பரங்கள் செய்தோம், ஆனால் எதுவும் உதவவில்லை" என்று அவரது கணவர் ஜ்வாலா பிரசாத் தெரிவித்தார்.

இந்த கும்பமேளாவில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்று வரும் சூழலில் , மக்களைக் கண்காணிக்கும் பொருட்டு உள்ளூர் காவல்துறையினர் அடையாள சரிபார்ப்பு பணிகளை நடத்துகிறார்கள். இந்த சூழலில் வழக்கமான சோதனையின்போது, அவர்கள் திரிவேணி காட் தங்குமிடத்தில் அப்பெண்ணின் குடும்பத்தினர் கிருஷ்ணா தேவியைக் கண்டு பிடித்தார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com