மணிப்பூர் - மீண்டும் வன்முறை.. உள்ளூர் காவல்துறைக்கு அஞ்சி ராணுவ அதிகாரி காலில் விழுந்த பெண்கள்!

மணிப்பூரில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கி இருப்பதால் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டைகளை தொடங்கியுள்ளனர்.

குக்கி இனத்தவர் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவம் விலக்கப்பட்டதை அடுத்து ராணுவத்தினர் வெளியேற முயன்றனர். ஆனால் உள்ளூர் காவல்துறையினர் தங்களை வன்முறையாளர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என அஞ்சி இந்த பெண்கள் அதிகாரி ஒருவரின் காலை பிடித்து கதறி அழுதனர். உள்ளத்தை உருக்கும் இந்த நிலை அவர்களின் அச்சத்தையும் அங்குள்ள சூழலையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

மணிப்பூரில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மோதல் தலையெடுத்துள்ளது. கிருஷ்ணபூர் மாவட்டம் செராகம் சந்தி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் 35 வயது பெண் ஒருவர் குண்டு காயமடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com