பொதுப் போக்குவரத்தான ரயில்களில் ஒருவருக்கொருவர் சண்டையிடும் காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவேகமாய் வைரலாகி விடுகின்றன. இந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் ஒன்று கொல்கத்தா லோக்கல் ரயிலில் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோவை @Ayushihihaha என்பவர் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் இருதரப்பு பெண்கள் தாக்கிக் கொள்கின்றனர். மேலும், ஒருவரையொருவர் செருப்பால் அடித்துக் கொள்கின்றனர். கைகளாலும் சண்டையிடுகின்றனர். இதனால் பெண்கள் அலறும் சத்தம் கேட்கிறது. எதற்காக இந்த சண்டை நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. இந்தப் பெண்கள் தகராறில் ஈடுபடுவதைப் பார்ப்பது பிற பயணிகள் அச்சத்துடன் ஒதுங்கி நிற்கின்றனர். அவர்களில் சிலர் சண்டை போடுபவர்களைத் தடுக்க முயல்கின்றனர். வீடியோவின் முடிவில், சண்டையில் ஈடுபட்ட பெண்களில் ஒருவர், தனது அருகில் நிற்கும் ஒரு பையனை அடிக்கிறார். இந்த வீடியோதான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.