கோளாறான என்ஜின்களால் மூடப்பட்ட கிங்ஃபிஷர்: விஜய் மல்லையா விளக்கம்

கோளாறான என்ஜின்களால் மூடப்பட்ட கிங்ஃபிஷர்: விஜய் மல்லையா விளக்கம்

கிங்ஃபிஷர் விமான நிறுவனம் மூடப்பட்டதற்கு கோளாறான ‌விமான என்ஜின்கள்தான் காரணம் என அந்நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் பதுங்கியுள்ள விஜய் மல்லையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ப்ரட் அண்ட் வொயிட்னி என்ற நிறுவனத்தின் என்ஜின்கள்தான் கிங்ஃபிஷர் விமானத்தில் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, ‌அந்த நிறுவனத்தின் என்ஜின்கள் பொருத்தப்பட்ட இன்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனத்தின் ஏர்பஸ் 320-ல் பொருத்தப்பட்ட என்ஜின்கள் குறித்து சோதனைக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநகரம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள மல்லையா, அந்த நிறுவனங்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டதில் ஆச்சரியமில்லை என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com