“செய்தியாளர்களை கொல்லும் நோக்கமில்லை” - நக்சலைட்டுகள் கடிதம்

“செய்தியாளர்களை கொல்லும் நோக்கமில்லை” - நக்சலைட்டுகள் கடிதம்
“செய்தியாளர்களை கொல்லும் நோக்கமில்லை” - நக்சலைட்டுகள் கடிதம்

தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ கொல்லப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில், அவரது மரணம் தவறுதலாக நடந்ததாக நக்சலைட்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ உட்பட 3 போலீசார் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் குழுவினர் சென்றிருந்தனர். அப்போது, பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில்தான் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் பரிதாபமாக கொல்லப்பட்டார். 

தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ கொல்லப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில், அவரது மரணம் தவறுதலாக நடந்ததாக நக்சலைட்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.  

அந்தச் செய்தியில், “நாங்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது, டிடி செய்தி குழுவினர் போலீசாரின் பைக்கில் வந்துள்ளார்கள். அவர்கள் செய்தியாளர்கள் என்பதை மறந்துவிட்டோம். நாங்கள் நடத்திய தாக்குதலில் அச்சுதானந்தும் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். 

அவரை குறி வைத்து நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. பத்திரிகையாளர்கள் எங்களது எதிரிகள் அல்ல. அவர்கள் எங்கள் நண்பர்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் தாக்க மாட்டோம். எங்களது இடங்களுக்குள் வரும் போது போலீசாருடனோ அல்லது பாதுகாப்பு படையினருடனோ வரவேண்டாம் என்று பத்திரிகையாளர்களை கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com