அட, நறுக் சாமியார் டுபாக்கூராம்ல!

அட, நறுக் சாமியார் டுபாக்கூராம்ல!
அட, நறுக் சாமியார் டுபாக்கூராம்ல!

கேரளாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஹரிசுவாமி, போலி சாமியார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த கங்கேசானந்த தீர்த்தப்பதா என்ற ஹரிசுவாமி, பெட்டா என்ற நகரில் உள்ள ஒருவரின் வீட்டில் ஆறு ஆண்டுகளாக பூஜை நடத்தி வந்துள்ளார். அப்போது, அந்த நபரின் மகளை, 12ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. தற்போது கல்லூரியில் படிக்கும் அந்த 23 வயது பெண்ணிடம், கடந்த வெள்ளிக் கிழமை இரவும் பூஜையின் போது அத்தகைய செயலில் ஈடுபட சாமியார் முயன்றபோது, அதை எதிர்த்து கடுமையாக போராடிய அந்த இளம் பெண், இறுதியில் ஹரிசுவாமியின் ஆணுறுப்பை கத்தியால் துண்டித்துள்ளார். துணிச்சலாக செயல்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர் போலி சாமியார் எனத் தெரியவந்துள்ளது. இவர் மீது வழக்குப் பதிந்துள்ள போலீசார், அவருக்கு எந்தெந்த வழியில் நிதி உதவிகள் கிடைத்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com