கேரளா: மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு

கேரளா: மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு

கேரளா: மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு
Published on

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது.

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி கோயிலுக்கு வரவுள்ள நிலையில், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் நாளை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதேபோல், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று அல்லது ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்று கட்டாயம் கொண்டுவர வேண்டுமென தேவஸம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com